என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமண தகராறில் கத்திரிகோலால் குத்தி வாலிபர் கொலை- வடமாநில தொழிலாளி கைது
பூந்தமல்லி:
மாங்காடு அடுத்த கொளப்பாக்கத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அஜய்குமார் (வயது 19) என்பவர் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருடன் அதே மாநிலத்தை சேர்ந்த சுனில் கொண்டா உள்பட 5-க்கும் மேற்பட்டோர் தங்கி தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று இரவு அஜய்குமாருக்கும், சுனில் கொண்டாவுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சுனில் கொண்டா மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. இருவரும் ஒருவரைஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த சுனில்கொண்டா அருகில் இருந்த கத்திரிகோலை அஜய்குமாரின் கழுத்தில் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். உடன் தங்கி இருந்த தொழிலாளர்கள் அஜய்குமாரை மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அஜய்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மாங்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனில்கொண்டாவை கைது செய்தனர். திருமணத் தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.
கொலையுண்ட அஜய்குமாரின் அக்காளை சுனில்கொண்டாவுக்கு பேசி முடிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அஜய்குமார் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மேலும் அக்காளை சுனில் கொண்டாவுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்று பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். இதனை அறிந்த சுனில் கொண்டா தொடர்ந்து அஜய்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று இந்த மோதல் கொலையில் முடிந்துள்ளது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று சுனில் கொண்டாவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்