search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வெம்பாக்கம் அருகே பைக் மீது ஆட்டோ மோதி புதுமாப்பிள்ளை பலி

    வெம்பாக்கம் அருகே பைக் மீது லோடு ஆட்டோ மோதி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடந்தாங்கலை சேர்ந்தவர் ஏழுமலை மகன் அன்பரசன் (வயது 20). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று காலை அன்பரசன் அதே ஊரை சேர்ந்த அவரது நண்பர் பூவரசன்(23) இருவரும் பைக்கில் வேலைக்கு சென்றனர். வேலை முடிந்து இரவு பைக்கில் வீடு திரும்பினர். கூழமந்தல் அடுத்த வெள்ளாமலை என்ற இடத்தில் வந்த போது எதிரே வந்த ஆட்டோ பைக் மீது வேகமாக மோதியது.

    இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு அன்பரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பூவரசன் படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகின், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த பூவரசன், ஆட்டோ டிரைவர் உத்தரமேரூரை சேர்ந்த சூர்யா (38) ஆகியோரை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து தூசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பைக் மீது லோடு ஆட்டோ மோதி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×