search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கோவையில் இன்று காலை மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

    கோவையில் இன்று காலை மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள நீலாம்பூரை சேர்ந்தவர் கோபால்சாமி (வயது 39). தனியார் நிறுவன ஊழியர். இன்று காலை இவர் தனது வீட்டில் சுவிட்ச் போட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் கோபால்சாமி தூக்கி வீசப்பட்டார்.

    சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது மின்சாரம் தூக்கி வீசப்பட்டிருப்பதை அறிந்தனர். இதனையடுத்து அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×