search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    தேனி அருகே துக்க வீட்டுக்கு வந்த வாலிபர் பலி

    தேனி அருகே துக்க வீட்டுக்கு வந்த வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிழந்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம் காமாட்சிபுரம் மேற்கு காலனி தெருவைச் சேர்ந்த மணிகண்டன் மகன் விக்னேஸ்வர் (வயது 20). இவர் கோவையில் கூலி வேலை பார்த்து வந்தார். மணிகண்டனும் அவரது மனைவியும் காமாட்சிபுரத்தில் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.

    விக்னேஸ்வரனின் தாத்தா இறந்து விட்டதால் அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் சொந்த ஊருக்கு வந்தார். வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார்.

    உறவினர்கள் தேடி வந்த போது அங்குள்ள கிணற்றில் விக்னேஸ்வரன் பிணமாக கிடந்தார். தீயணைப்பு துறையினர் உதவியுடன் அவரை மேலே கொண்டு வந்தனர். இது குறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் ஓடைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×