என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி அருகே இளம்பெண் உள்பட 4 பேர் திடீர் மாயம்
தேனி:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அப்பிபட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த சிவா மகள் பிரியா (வயது 17). இவர் க.புதுப்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் உள்ள தனது அத்தை ஜமுனா வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று அங்கிருந்து திடீரென மாயமானார்.
இது குறித்து அவரது தந்தை சிவா உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் தேவாரம் கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்த நாகராஜ் மனைவி பூபதி (50). இவர் விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். இது குறித்து அவரது கணவர் நாகராஜ் கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போடி ராஜவீதி கீழத் தெருவைச் சேர்ந்த வேல் முருகன் மனைவி சத்தீஸ்வரி (30). இவர்களுக்கு ஹன்சிகா (5) என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் தனது குழந்தையை தூக்கிக் கொண்டு விசுவாசபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு செல்வதாக சத்தீஸ்வரி கூறிச் சென்றார்.
ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்