என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
போலீசார் அதிரடி சோதனை: 3 கிலோ கஞ்சா- ஆட்டோ பறிமுதல்
மதுரை:
மதுரை திருப்பரங்குன்றம் பெட்ரோல் பங்க் முன்பு ஒரு வாலிபர் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரிக்கு தகவல் வந்தது.
அதன் பேரில் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ராஜ்குமார் (வயது 44) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா, 150 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
கரிமேடு மீன் மார்க்கெட் நேதாஜி சிலை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோலைராஜூக்கு தகவல் வந்தது.
போலீசார் விரைந்து சென்று அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ராணி (60), மருது (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை வண்டியூர் சங்கு நகர் பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில் அண்ணாநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அண்ணா நகர் வைகை காலனியைச் சேர்ந்த ஆனந்த் (25) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்த கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் கஞ்சா விற்றதாக அருண்பாண்டி, ஆசாரி மணி, ராஜ்குமார், ஜோதி குமார், ஆதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்