search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    கொட்டாம்பட்டி அருகே பூட்டிக்கிடந்த 3 வீடுகளில் நகை-பணம் கொள்ளை

    கொட்டாம்பட்டி அருகே பூட்டிக்கிடந்த 3 வீடுகளில் நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    மேலூர்:

    மேலூரை அடுத்த கொட்டாம்பட்டி அருகே உள்ள உதினிப்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ்கான். இவரது வீடு பூட்டிக் கிடந்தது. இவரது வீட்டின் அருகே உள்ள ‌ஷகிலா மற்றும் முகமது அன்சாரி ஆகியோரின் வீடுகளும் பூட்டிக்கிடந்தன.

    இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நேற்று இரவு சதீஷ்கான் வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் நகை, 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.

    பின்னர் ‌ஷகீலா வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த 50 ஆயிரத்தை சுருட்டிக் கொண்டனர். பின்னர் முகமது அன்சாரி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 6 ஆயிரம் ரூபாயை திருடினர். அங்கிருந்த கோழி குழம்பையும் எடுத்துச் சென்று விட்டனர்.

    இன்று காலை தான் 3 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை நடந்த சம்பவம் தெரியவந்தது.

    இது குறித்து கொட்டாம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×