என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆடு மேய்க்க சென்ற போது காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி
Byமாலை மலர்5 Oct 2019 4:15 AM GMT (Updated: 5 Oct 2019 4:15 AM GMT)
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆடு மேய்க்க சென்ற போது காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குழிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி(வயது65). இவர் ஆடு, மாடுகள் வைத்து வளர்த்து வருகிறார். அவைகளை தினமும் அங்குள்ள வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்.
நேற்றும் வழக்கம் போல் தனது ஆடு, மாடுகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அங்குள்ள புதருக்குள் காட்டுயானை ஒன்று மறைந்திருந்தது. இதை மயில்சாமி கவனிக்கவில்லை. இந்த நிலையில் அந்த யானை திடீரென மயில்சாமியை தூக்கி வீசியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த உடுமலை வனவர் தனபால் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மயில்சாமியின் உடலை கயிறு கட்டி தங்கள் பகுதிக்கு தூக்கி சென்றனர். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குழிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி(வயது65). இவர் ஆடு, மாடுகள் வைத்து வளர்த்து வருகிறார். அவைகளை தினமும் அங்குள்ள வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்.
நேற்றும் வழக்கம் போல் தனது ஆடு, மாடுகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அங்குள்ள புதருக்குள் காட்டுயானை ஒன்று மறைந்திருந்தது. இதை மயில்சாமி கவனிக்கவில்லை. இந்த நிலையில் அந்த யானை திடீரென மயில்சாமியை தூக்கி வீசியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த உடுமலை வனவர் தனபால் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மயில்சாமியின் உடலை கயிறு கட்டி தங்கள் பகுதிக்கு தூக்கி சென்றனர். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X