search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆடு மேய்க்க சென்ற போது காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆடு மேய்க்க சென்ற போது காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குழிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி(வயது65). இவர் ஆடு, மாடுகள் வைத்து வளர்த்து வருகிறார். அவைகளை தினமும் அங்குள்ள வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்.

    நேற்றும் வழக்கம் போல் தனது ஆடு, மாடுகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அங்குள்ள புதருக்குள் காட்டுயானை ஒன்று மறைந்திருந்தது. இதை மயில்சாமி கவனிக்கவில்லை. இந்த நிலையில் அந்த யானை திடீரென மயில்சாமியை தூக்கி வீசியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்த உடுமலை வனவர் தனபால் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மயில்சாமியின் உடலை கயிறு கட்டி தங்கள் பகுதிக்கு தூக்கி சென்றனர். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×