search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்.ராதாகிருஷ்ணன்
    X
    பொன்.ராதாகிருஷ்ணன்

    இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்போம் - பொன்.ராதாகிருஷ்ணன்

    நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்போம் என பா.ஜ.க. முன்னாள் மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
    சென்னை:

    நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. சார்பில் விழுப்புரத்தைச் சேர்ந்த புகழேந்தியும், நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர்.
     
    அ.தி.மு.க. சார்பில் விக்கிரவாண்டியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட காணை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக உள்ள முத்தமிழ்ச்செல்வனும், நாங்குநேரியில் நெல்லை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளராக உள்ள ரெட்டியார்பட்டி வெ. நாராயணனும் போட்டியிடுகின்றனர் என எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளனர்.
     
    இதற்கிடையே, நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தை அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி , திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இதையடுத்து, நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு தே.மு.தி.க. ஆதரவு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு பாஜக அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று பா.ஜ.க. அலுவலகம் சென்றனர். 

    அங்கு முன்னாள் மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து, நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    Next Story
    ×