search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கிருஷ்ணாபுரம் அருகே 10-ம் வகுப்பு மாணவி திடீர் தற்கொலை

    கிருஷ்ணாபுரம் அருகே 10-ம் வகுப்பு மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரத்தை அடுத்துள்ள கன்னிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குப்பம்மா. இவரது மகள் கார்த்திகா (வயது15). இவர் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கடந்த 2 மாதங்களாக மாணவி தனது தாய் வீட்டில் இருந்து வந்தார்.

    நேற்று கார்த்திகா பூச்சி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக கார்த்திகா உயிரிழந்தார். 

    இது குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×