என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்தாமரைகுளம் அருகே கடத்தப்பட்ட கல்லூரி மாணவி மீட்பு - காதலன் மீது வழக்குப்பதிவு
Byமாலை மலர்3 Oct 2019 12:29 PM GMT (Updated: 3 Oct 2019 12:29 PM GMT)
தென்தாமரைகுளம் அருகே கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை மீட்ட போலீசார் காதலன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
தென்தாமரைகுளம் அருகே தேரிவிளையைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் ஹரிஹர சுதன், (வயது 23).
இவர், கன்னியாகுமரி அருகே தெற்கு குண்டலைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவிக்கு 17 வயதே ஆகிறது. இந்த நிலையில் ஹரிஹரசுதன், கல்லூரி மாணவியுடன் மாயமானார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மாணவியின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் தேரிவிளையில் உள்ள ஹரிஹர சுதனின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். திடீரென பிளாஸ்டிக் கவரில் பெட்ரோல் நிரப்பி வைத்திருந்ததை வீட்டின் மீது வீசினார்கள். இதில், ஹரிஹர சுதனின் தாயார் ராஜலெட்சுமி காயம் அடைந்தார். இந்த கும்பல் ராஜலெட்சுமியை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இது குறித்து ராஜலெட்சுமி தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தெற்கு குண்டல் பகுதியைச் சேர்ந்த சுதன் (வயது 19), வினோத் மற்றும் கன்னியாகுமரி சுனாமி காலனியைச் சேர்ந்த சுதன் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.மாதவபுரத்தைச் சேர்ந்த மகேசை தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே மாணவி மாயமான விவகாரம் தொடர்பாக அவரது தாயார் கன்னியாகுமரி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை தேரிவிளையைச் சேர்ந்த சுப்பையா மகன் ஹரிஹர சுதன் கடத்திச் சென்றதாக கூறி இருந்தார்.
இதன் அடிப்படையில் போலீசார் ஹரிஹரசுதன் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடத்தப்பட்ட மாணவியை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று மாலை அவரை மீட்டனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை காப்பகத்தில் ஒப்படைத்தனர். இன்று காலையில் காப்பகத்தில் இருந்து மாணவி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அவரை கடத்திச் சென்றது யார்? என்ற விவரங்களை போலீசார் சேகரித்தனர். இதை தொடர்ந்து மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
மாணவி கடத்தல் வழக்கில் தலைமறைவாகி உள்ள ஹரிஹர சுதனை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
தென்தாமரைகுளம் அருகே தேரிவிளையைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் ஹரிஹர சுதன், (வயது 23).
இவர், கன்னியாகுமரி அருகே தெற்கு குண்டலைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவிக்கு 17 வயதே ஆகிறது. இந்த நிலையில் ஹரிஹரசுதன், கல்லூரி மாணவியுடன் மாயமானார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மாணவியின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் தேரிவிளையில் உள்ள ஹரிஹர சுதனின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். திடீரென பிளாஸ்டிக் கவரில் பெட்ரோல் நிரப்பி வைத்திருந்ததை வீட்டின் மீது வீசினார்கள். இதில், ஹரிஹர சுதனின் தாயார் ராஜலெட்சுமி காயம் அடைந்தார். இந்த கும்பல் ராஜலெட்சுமியை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இது குறித்து ராஜலெட்சுமி தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தெற்கு குண்டல் பகுதியைச் சேர்ந்த சுதன் (வயது 19), வினோத் மற்றும் கன்னியாகுமரி சுனாமி காலனியைச் சேர்ந்த சுதன் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.மாதவபுரத்தைச் சேர்ந்த மகேசை தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே மாணவி மாயமான விவகாரம் தொடர்பாக அவரது தாயார் கன்னியாகுமரி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை தேரிவிளையைச் சேர்ந்த சுப்பையா மகன் ஹரிஹர சுதன் கடத்திச் சென்றதாக கூறி இருந்தார்.
இதன் அடிப்படையில் போலீசார் ஹரிஹரசுதன் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடத்தப்பட்ட மாணவியை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று மாலை அவரை மீட்டனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை காப்பகத்தில் ஒப்படைத்தனர். இன்று காலையில் காப்பகத்தில் இருந்து மாணவி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அவரை கடத்திச் சென்றது யார்? என்ற விவரங்களை போலீசார் சேகரித்தனர். இதை தொடர்ந்து மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
மாணவி கடத்தல் வழக்கில் தலைமறைவாகி உள்ள ஹரிஹர சுதனை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X