search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    மதுரையில் கல்லூரி மாணவி திடீர் மாயம்- கடத்தப்பட்டாரா?

    மதுரையில் கல்லூரிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

    மதுரை:

    மதுரை ஆழ்வார்புரம் வைகைவடகரை பகுதியை சேர்ந்தவர் ராமர், சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி வெற்றிச்செல்வி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    2-வது மகள் கவிபிரியா (வயது 17). தனியார் பெண்கள் கல்லூரியில் பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கவிபிரியா கூறி விட்டுச் சென்றார். மாலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் பதட்டமடைந்த பெற்றோர் மகளை உறவினர் மற்றும் தோழி வீடுகளிலும் தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து ராமர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து கவிபிரியாவை யாராவது கடத்தி சென்றார்களா? அல்லது தானாகவே எங்கேனும் சென்றாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×