என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வி.கே.புரத்தில் தோழியின் வீட்டில் நகை திருடிய பெண் கைது
Byமாலை மலர்1 Oct 2019 1:28 PM GMT (Updated: 1 Oct 2019 1:28 PM GMT)
வி.கே.புரத்தில் தோழியின் வீட்டில் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.
நெல்லை:
வி.கே.புரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தனுஷ். இவரது மனைவி சுகாஷினி (வயது31). இவர் அந்த பகுதியில் உள்ள மில்லில் வேலை பார்த்து வருகிறார். இதைத்தொடர்ந்து சுகாஷினியின் தோழியான அந்த பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி (26) என்பவர் சுகாஷினியின் வீட்டிற்கு வந்து அவரது குழந்தைகளை கவனித்து கொள்வார்.
சம்பவத்தன்று சுகாஷினியின் வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுகாஷினி நகைகளை சரிபார்த்தார். அப்போது ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 11 பவுன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து சுபாஷினி வி.கே.புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சுப்புலட்சுமியிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது சுப்புலட்சுமியும், அவரது உறவினரான சிவந்திபுரத்தை சேர்ந்த செந்தில்வேல் முருகன் (31) என்பவரும் சேர்ந்து அந்த நகைகளை திருடியது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து திருட்டு போன நகைகளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X