என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை வெட்டி கொல்ல முயன்ற நண்பர்கள் 5 பேர் கைது
Byமாலை மலர்1 Oct 2019 11:51 AM GMT
வில்லியனூர் அருகே மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை வெட்டி கொல்ல முயன்ற நண்பர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே நடராஜன் நகரை சேர்ந்தவர் ஆல்பர்ட் (வயது28) பெயிண்டர். இவரும் அதே பகுதியை சேர்ந்த மாடுமணி (29), அய்யப்பன் (28) மற்றும் அலெக்ஸ், பாலாஜி, சரண்ராஜ் ஆகியோரும் நண்பர்கள்.
சம்பவத்தன்று இவர்கள் அனைவரும் அதே பகுதியில் அமர்ந்து மதுகுடித்து கொண்டு இருந்தனர். அப்போது குடிபோதையில் ஆல்பர்ட் நண்பர்களை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த மாடுமணி உள்பட 5 பேரும் சேர்ந்து ஆல்பர்ட்டை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த ஆல்பர்ட்டை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் ஆல்பர்ட் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஆல்பர்ட்டின் தாயார் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஆகியோர் வழக்குபதிவு செய்து மாடுமணி உள்ளிட்ட 5 பேரையும் தேடிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வில்லியனூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே நின்றிருந்த அய்யப்பன், சரண்ராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இன்று காலை கோபாலன்கடை பகுதியில் பதுங்கி இருந்த மாடுமணி மற்றம் அலெக்ஸ், பாலாஜி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர் அருகே நடராஜன் நகரை சேர்ந்தவர் ஆல்பர்ட் (வயது28) பெயிண்டர். இவரும் அதே பகுதியை சேர்ந்த மாடுமணி (29), அய்யப்பன் (28) மற்றும் அலெக்ஸ், பாலாஜி, சரண்ராஜ் ஆகியோரும் நண்பர்கள்.
சம்பவத்தன்று இவர்கள் அனைவரும் அதே பகுதியில் அமர்ந்து மதுகுடித்து கொண்டு இருந்தனர். அப்போது குடிபோதையில் ஆல்பர்ட் நண்பர்களை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த மாடுமணி உள்பட 5 பேரும் சேர்ந்து ஆல்பர்ட்டை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த ஆல்பர்ட்டை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் ஆல்பர்ட் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஆல்பர்ட்டின் தாயார் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஆகியோர் வழக்குபதிவு செய்து மாடுமணி உள்ளிட்ட 5 பேரையும் தேடிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வில்லியனூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே நின்றிருந்த அய்யப்பன், சரண்ராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இன்று காலை கோபாலன்கடை பகுதியில் பதுங்கி இருந்த மாடுமணி மற்றம் அலெக்ஸ், பாலாஜி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X