search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சொத்து தகராறில் தந்தையை அடித்துக்கொன்ற மகனை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

    உடுமலையில் சொத்து தகராறில் தந்தையை அடித்துக்கொன்ற மகனை போலீசார் 3 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
    உடுமலை:

    உடுமலை ஜே.என். பாளையம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கோதண்ட சாமி (வயது65). விவசாயி. இவருக்கு சக்திவேல் குமார் (22) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக தந்தை- மகனுக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது.

    இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சக்திவேல்குமார் அங்கிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து தந்தையின் தலையில் பின்புறமாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த கோதண்டசாமி அலறி சத்தம்போட்டு விழுந்தார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது கோதண்டசாமி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் இறந்து விட்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் தளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அவரது மகன் தப்பி ஓடிவிட்டார். கொலை செய்யப்பட்ட கோதண்டசாமியின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு திஷாமிட்டல் உத்தரவின் பேரில் உடுமலை டி.எஸ்.பி. ஜெய்சந்திரன் தலைமையில் குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், மடத்துக்குளம் இன்ஸ்பெக்டர் ராஜ்கண்ணா, உடுமலை மகளிர் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் மணிகண்டன், முத்துக்குமார்,. பஞ்சலிங்கம், லிங்கேஸ்வரன் ஆகியோர் அடங்கிய 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் பொள்ளாச்சி, பழனி, கேரளா உள்ளிட்ட இடங்களில் சக்திவேல்குமாரை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×