என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சொத்து தகராறில் தந்தையை அடித்துக்கொன்ற மகனை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு
Byமாலை மலர்1 Oct 2019 11:37 AM GMT (Updated: 1 Oct 2019 11:37 AM GMT)
உடுமலையில் சொத்து தகராறில் தந்தையை அடித்துக்கொன்ற மகனை போலீசார் 3 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
உடுமலை:
உடுமலை ஜே.என். பாளையம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கோதண்ட சாமி (வயது65). விவசாயி. இவருக்கு சக்திவேல் குமார் (22) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக தந்தை- மகனுக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சக்திவேல்குமார் அங்கிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து தந்தையின் தலையில் பின்புறமாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த கோதண்டசாமி அலறி சத்தம்போட்டு விழுந்தார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது கோதண்டசாமி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் இறந்து விட்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் தளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அவரது மகன் தப்பி ஓடிவிட்டார். கொலை செய்யப்பட்ட கோதண்டசாமியின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு திஷாமிட்டல் உத்தரவின் பேரில் உடுமலை டி.எஸ்.பி. ஜெய்சந்திரன் தலைமையில் குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், மடத்துக்குளம் இன்ஸ்பெக்டர் ராஜ்கண்ணா, உடுமலை மகளிர் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் மணிகண்டன், முத்துக்குமார்,. பஞ்சலிங்கம், லிங்கேஸ்வரன் ஆகியோர் அடங்கிய 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் பொள்ளாச்சி, பழனி, கேரளா உள்ளிட்ட இடங்களில் சக்திவேல்குமாரை தேடி வருகிறார்கள்.
உடுமலை ஜே.என். பாளையம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கோதண்ட சாமி (வயது65). விவசாயி. இவருக்கு சக்திவேல் குமார் (22) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக தந்தை- மகனுக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சக்திவேல்குமார் அங்கிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து தந்தையின் தலையில் பின்புறமாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த கோதண்டசாமி அலறி சத்தம்போட்டு விழுந்தார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது கோதண்டசாமி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் இறந்து விட்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் தளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அவரது மகன் தப்பி ஓடிவிட்டார். கொலை செய்யப்பட்ட கோதண்டசாமியின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு திஷாமிட்டல் உத்தரவின் பேரில் உடுமலை டி.எஸ்.பி. ஜெய்சந்திரன் தலைமையில் குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், மடத்துக்குளம் இன்ஸ்பெக்டர் ராஜ்கண்ணா, உடுமலை மகளிர் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் மணிகண்டன், முத்துக்குமார்,. பஞ்சலிங்கம், லிங்கேஸ்வரன் ஆகியோர் அடங்கிய 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் பொள்ளாச்சி, பழனி, கேரளா உள்ளிட்ட இடங்களில் சக்திவேல்குமாரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X