search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    பொள்ளாச்சி அருகே அரசு பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி

    பொள்ளாச்சியில் சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் மோதி அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
    பொள்ளாச்சி:

    கோவையில் இருந்து பழனிக்கு பொள்ளாச்சி வழியாக நேற்று இரவு அரசு பஸ் சென்றது. பஸ்சை பழனியை சேர்ந்த லட்சுமணன் (வயது45) ஓட்டினார். கண்டக்டராக சொக்கலிங்கம் என்பவர் இருந்தார். இந்த பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர்.

    பஸ் பொள்ளாச்சியை அடுத்த ஊஞ்சவேலம்பட்டி அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக சாலையின் நடுவில் புதிதாக வைக்கப்பட்டிருந்த தடுப்புசுவற்றில் பஸ் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியில் வரமுடியாமல் சிக்கி கொண்டனர். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் பஸ்சில் இருந்த பயணிகளை மீட்டனர். இதில் உடுமலை பள்ளப்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணா (29) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் படுகாயமடைந்த லட்சுமணன், கண்டக்டர் சொக்கலிங்கம்(56), பயணிகள் மோகன் குமார் (45), பாஸ்கரன் (60), அய்யனார் (71) ஆகியோரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்து. இதில் கண்டக்டர் சொக்கலிங்கம் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×