என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தவளக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற ராணுவ வீரர் தவறி விழுந்து பலி
பாகூர்:
தவளக்குப்பத்தை அடுத்த அபிஷேகப்பாக்கம் திருவரசன் நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது52). முன்னாள் ராணுவ வீரர். இவர் வில்லியனூர் ரெயில் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு இவர் வேலை முடிந்தவுடன் தனது மோட்டார் சைக்கிளில் தவளக்குப்பத்தில் இருந்து அபிஷேகப்பாக்கத்திற்கு சென்று கொண்டு இருந்தார்.
அபிஷேகப்பாக்கம் அருகே வந்த போது அவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அருகில் இருந்த வாய்காலில் விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்து போனார்.
இது குறித்து ராமலிங்கத்தின் மகன் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ராமலிங்கத்துக்கு காசியம்மாள் என்ற மனைவியும் 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்