என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
திருச்சி:
திருச்சி காஜாபேட்டை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்வது குறித்து பாலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரோந்து பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை விசாரித்ததில் திருச்சி மாவட்டம், சங்கிலி யாண்டபுரம் காந்திநகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் அருண் குமார் (வயது 28) என்பது தெரியவந்தது. அவரை சோதனை செய்தபோது லாட்டரி டிக்கெட் வைத்திருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்தனர்.
இதேபோல் திருச்சி தென்னூர் பகுதியில் லாட்டரி டிக்கெட் விற்பனை குறித்து தில்லை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (31) என்பவர் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் சோதனை செய்தபோது லாட்டரி டிக்கெட் வைத்திருந்தது தெரியவந்தது.உடனடியாக அவரை தில்லை நகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்