என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நைனார்மண்டபத்தில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலி
Byமாலை மலர்30 Sep 2019 12:12 PM GMT (Updated: 30 Sep 2019 12:12 PM GMT)
நைனார்மண்டபத்தில் இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் நடல் நசுங்கி பலியானார்.
புதுச்சேரி:
தவளக்குப்பத்தை அடுத்த தமிழக பகுதியான பெரிய காட்டுப்பாளையத்தை அடுத்த மதலப்பட்டு பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது34). இவர் குருமாம்பேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இன்று காலை வீட்டில் இருந்து கண்ணதாசன் வழக்கம்போல் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.
காலை 5.40 மணியளவில் நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் அருகே வந்த போது பின்னால் வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்த கண்ணதாசன் மீது பஸ்சின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கிய கண்ணதாசன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பின்னர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுவை கிழக்குபகுதி போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் பலியான கண்ணதாசனுக்கு திருமணமாகி 1½ வருடமே ஆகிறது. இவருக்கு சரண்யா என்ற மனைவியும் 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தவளக்குப்பத்தை அடுத்த தமிழக பகுதியான பெரிய காட்டுப்பாளையத்தை அடுத்த மதலப்பட்டு பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது34). இவர் குருமாம்பேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இன்று காலை வீட்டில் இருந்து கண்ணதாசன் வழக்கம்போல் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.
காலை 5.40 மணியளவில் நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் அருகே வந்த போது பின்னால் வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்த கண்ணதாசன் மீது பஸ்சின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கிய கண்ணதாசன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பின்னர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுவை கிழக்குபகுதி போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் பலியான கண்ணதாசனுக்கு திருமணமாகி 1½ வருடமே ஆகிறது. இவருக்கு சரண்யா என்ற மனைவியும் 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X