என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேரளம் அருகே 108 ஆம்புலன்ஸ் மோதி முதியவர் பலி
Byமாலை மலர்30 Sep 2019 10:19 AM GMT (Updated: 30 Sep 2019 10:19 AM GMT)
பேரளம் அருகே சாலையை கடக்க முயன்ற போது 108 ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பேரளம்:
பேரளம் அருகே உள்ள கீரனூர் ஜெயராஜ் நகரை சேர்ந்தவர் பாலையன் (வயது 55). இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் சைக்கிளில் திருவாரூர்- மயிலாடுதுறை சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது மயிலாடு துறையில் இருந்து திருவாரூர் நோக்கி அவசர சிகிச்சை நோயாளியுடன் வந்த 108 ஆம்புலன்ஸ் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பாலையன் படுகாயமடைந்தார். இதையடுத்து அதே ஆம்புலன்சில் அவரை ஏற்றிக் கொண்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து அவரது மகன் பிரவு பேரளம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீர்காழி பகுதியை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் சீனிவாசன் என்பவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X