என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரையில் இன்சூரன்சு அலுவலகத்தில் திடீர் தீ விபத்து
மதுரை:
மதுரை வடக்குவெளி வீதியில் உள்ள அடுக்குமாடி வணிக வளாகத்தின் 2-வது தளத்தில் நேஷனல் இன்சூரன்சு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்தனர்.
மேலாளர் அறையை திறந்த பியூன், அங்கிருந்த ஏ.சி.யை ஆன் செய்தார். பின்னர் அவர் அந்த அறையை சுத்தம் செய்தார்.
அப்போது திடீரென ஏ.சி. அறையில் புகை வந்தது. சற்று நேரத்தில் அங்கு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அலுவலக ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.
தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பெரியார் மற்றும் அனுப்பானடி தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 வண்டிகளில் வந்த வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மின்சார கோளாறு காரணமாக தீ விபத்து நடந்ததாக கூறப்பட்ட நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்