என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவள்ளூர் அருகே ஷேர் ஆட்டோ மீது பஸ் மோதல்: 2 பேர் பலி
சென்னை:
பெங்களூரை சேர்ந்தவர்கள் நூருல்லா கான், நாதிம் அன்வர். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த மேலும் 5 பேருடன் சுங்கு வார்சத்திரத்தை அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் உள்ள தர்காவுக்கு வந்தனர்.
இன்று காலை அவர்கள் அங்கிருந்து கடம்பத்தூர் ரெயில் நிலையம் செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் புறப்பட்டனர், அகரம் அருகே வந்தபோது கடம்பத்தூரில் இருந்து தனியார் கம்பெனிக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் திடீரென ஷேர் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஷேர் ஆட்டோ முழுவதும் நொறுங்கியது. அதிலிருந்த நூருல்லா கான், நாதிம அன்வர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் உடன் இருந்த முகமது கலீன், சையது ஆசிப், முஸ்தபா அகமது உள்ளிட்ட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்