என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
லாஸ்பேட்டையில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை
புதுச்சேரி:
லாஸ்பேட்டை அசோக்நகர் காமராஜ் வீதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது69). இவருக்கு பேபி என்ற மனைவியும் அருண். சிவகுரு ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதற்கிடையே ரங்கநாதன் கடந்த 7 ஆண்டுகளாக நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனாலும் நோய் முழுவதுமாக தீரவில்லை. இதனால் தினம் தினம் அவதிப்பட்டு வந்தார்.
இதனால் மனமுடைந்த ரங்கநாதன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் வீட்டின் மாடிக்கு சென்ற ரங்கநாதன் அங்கு துணி காய வைக்க கட்டி இருந்த கேபிள் வயரால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மகன் அருண் கொடுத்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் திருக்கனூர் அருகே சோரப்பட்டு குட்டை தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது38), கட்டிட தொழிலாளி. இவருக்கு தனம் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இதற்கிடையே சங்கர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த சங்கர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருக்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்