என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகாசி அருகே சட்ட விரோதமாக பதுக்கிய ரூ.8 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
Byமாலை மலர்28 Sep 2019 7:33 AM GMT (Updated: 28 Sep 2019 7:33 AM GMT)
சிவகாசி அருகே சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 8 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெரிய மற்றும் சிறிய அளவிலான ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பட்டாசு உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது. பட்டாசு வெடி விபத்துகளை தடுக்க உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கவோ, உற்பத்தி செய்யவோ கூடாது என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளம் கிராமத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில், ரூ.8 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் அதனை பதுக்கி வைத்திருந்த விஜய கரிசல்குளத்தைச் சேர்ந்த நாராயணசாமி (50) என்பவரை தேடி வருகின்றனர்.
சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெரிய மற்றும் சிறிய அளவிலான ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பட்டாசு உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது. பட்டாசு வெடி விபத்துகளை தடுக்க உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கவோ, உற்பத்தி செய்யவோ கூடாது என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளம் கிராமத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில், ரூ.8 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் அதனை பதுக்கி வைத்திருந்த விஜய கரிசல்குளத்தைச் சேர்ந்த நாராயணசாமி (50) என்பவரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X