search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன் திருட்டு.
    X
    செல்போன் திருட்டு.

    தூத்துக்குடியில் வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபர் கைது

    தூத்துக்குடியில் காற்றுக்காக கதவை திறந்து வைத்த வீட்டில் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு பீச்ரோடு அண்ணா காலனியை சேர்ந்தவர் லாம்பர்ட் (வயது 52) தொழிலாளி. இவர் நேற்று காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கிகொண்டிருந்தார். 

    இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மதன் (வயது 21) என்பவர் லாம்பர்ட் வீட்டில் புகுந்து ஒரு செல்போனை திருடிச்சென்றார். இதன்மதிப்பு ரூ.15 ஆயிரம் என கூறப்படுகிறது. 

    இதுகுறித்து அவர் வடபாகம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனை கைது செய்தனர்.








    Next Story
    ×