என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குளித்தலை அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி
Byமாலை மலர்27 Sep 2019 1:27 PM GMT (Updated: 27 Sep 2019 1:27 PM GMT)
குளித்தலை அருகே பிளாட்பாரத்தை தாண்டி நிறுத்தப்பட்டதால் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
குளித்தலை:
கரூர் மாவட்டம் குளித் தலை மருதூர் குடித்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி முத்துக்கண்ணு (வயது 35). இவர் கரூரில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். தினமும் வேலைக்காக மருதூரில் இருந்து கரூருக்கு ரெயிலில் செல்வது வழக்கம். அதேபோல் மாலையில் கரூரில் இருந்து மருதூருக்கு ரெயிலில் ஊர் திரும்புவார்.
நேற்று அவர் பணி முடிந்ததும் கரூரில் இருந்து மருதூருக்கு ரெயிலில் புறப்பட்டார். மருதூர் ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்ததும், பிளாட்பாரத்தில் இருந்து சிறிது தூரம் தள்ளி ரெயில் நின்றது. இதனால் முத்துக்கண்ணு மிகவும் சிரமப்பட்டு ரெயிலில் இருந்து இறங்கினார். அப்போது நிலை தடுமாறி படுக்கட்டுகள் இடைவெளியின் வழியாக தண்டவாளத்தில் விழுந்தார்.
அப்போது ரெயில் புறப்பட்டதில் முத்துக்கண்ணுவின் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்தி லேயே உடல் துண்டாகி இறந்தார். பயணிகள் கூச்சலிடவே, என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். பின்னர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முத்துக்கண்ணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில் பிளாட்பாரத்தில் இருந்து சிறிது தூரம் தள்ளி நின்றதால்தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று பயணிகள் குற்றம் சாட்டி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X