என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனியில் தகராறு செய்ததை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்
தேனி:
தேனி வள்ளிநகர் கம்போஸ்ட் ஓடை தெருவை சேர்ந்தவர் அய்யனார் (வயது28). இவர் அதே பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது காசி மற்றும் அவரது உறவினர்கள் குடும்ப பிரச்சினை காரணமாக தகாத வார்த்தையால் பேசி தகராறு செய்து கொண்டிருந்தனர்.
இதனை அய்யனார் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை தாக்கியுள்ளனர்.
இது குறித்து தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போடி தேரடித்தெருவை சேர்ந்தவர் நாகையா (30). இவரது எதிர் வீட்டில் குடியிருக்கும் கவுதம் என்பவருக்கும் இவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று கவுதம், நாகையாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து போடி நகர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதமை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்