என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புற்றுநோயாளிகளுக்காக மொட்டை போட்ட பெண் போலீஸ்- அனுஷ்கா சர்மா பாராட்டு
Byமாலை மலர்27 Sep 2019 10:17 AM GMT (Updated: 27 Sep 2019 10:17 AM GMT)
கேரளாவில் புற்றுநோய் சிகிச்சைக்கு தானம் அளிக்க மொட்டை போட்ட பெண் போலீசுக்கு இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை:
பெண்கள் பலரும் தலைமுடியை அழகிற்காக வளர்க்கும் சூழலில், கேரளாவை சேர்ந்த சீனியர் சிவில் போலீஸ் அதிகாரி அபர்ணா லவகுமார் (வயது 46) தனது தலைமுடியை ஒரு நல்ல செயலுக்காக பயன்படுத்த தீர்மானித்தார்.
புற்றுநோய் காரணமாக தலைமுடியை இழந்து தவிக்கும் புற்றுநோயாளிகளுக்கு விக் தயாரிக்க உதவும் வகையில், அபர்ணா தனது தலைமுடியை முழுக்க மழித்து கொண்டுள்ளார்.
கால் வரை நீளமாக இருந்த அவரது தலைமுடியை தானமாக அளிப்பதன் மூலமாக, புற்றுநோயாளிகளுக்கு பலன் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கீமோதெரபி சிகிச்சைக்குப் பின் தலைமுடி இழந்து வாழ நேரிடும் புற்றுநோயாளிகளை பார்த்து இந்த உதவி செய்ய தீர்மானித்ததாக, அபர்ணா தெரிவித்தார்.
திரிசூரில் உள்ள இரிஞ்சலகுடா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அபர்ணாவுக்கு தற்போது பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மா அபர்ணாவை பாராட்டி பதிவு வெளியிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X