search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    புதுவையில் மதுக்கடை பூட்டை உடைத்து பணம் கொள்ளை

    புதுவையில் மதுக் கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர் அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க சி.சி.டி.வி. கேமராவையும் திருடி சென்றார்.

    புதுச்சேரி:

    புதுவை 100 அடி ரோடு நடேசன் நகர் பகுதியில் தனியார் மதுபான கடை உள்ளது. இந்த மதுபான கடையில் முத்திரையர்பாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்த சதீஷ் (வயது 25) என்பவர் கேஷியராக வேலை செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வியாபாரம் முடிந்ததும் மதுக்கடையை சதீஷ் பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

    நேற்று காலை 10 மணிக்கு வழக்கம் போல் சதீஷ் மதுக்கடையை திறக்க வந்தார். அப்போது மதுக்கடையின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

    மேலும் மதுக்கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவும் திருடப்பட்டு இருந்தது. பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர் தன்னை அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க சி.சி.டி.வி. கேமராவும் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து மதுக்கடை கேஷியர் சதீஷ் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் பக்கத்து கடைகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது மர்ம நபர் ஒருவர் மதுக்கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் சி.சி.டி.வி. கேமராவை கொள்ளையடித்து செல்வது பதிவாகி இருந்தது. இதனை வைத்து கொள்ளையனை பிடிக்க போலீசார் நட வடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    Next Story
    ×