என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரை பசுமலையில் ஷேர்ஆட்டோ மோதி 1½ மாத குழந்தை பலி
மதுரை:
திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் பர்மா காலனியை சேர்ந்தவர் ஞானபிரகாஷ். இவருக்கு 1½ மாத கவிஸ்வரன் என்ற ஆண் குழந்தை இருந்தது.
சம்பவத்தன்று ஞானபிரகாஷ் தனது மனைவி, குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். பசுமலை சர்ச் அருகே வந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த ஷேர்ஆட்டோ கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் ஞானபிரகாஷ், அவரது மனைவி, குழந்தை ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த அவர்களை அந்த பகுதி மக்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த கவிஸ்வரனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் இன்று காலை சிகிச்சை பலனின்றி கவிஸ்வரன் பரிதாபமாக இறந்தான். ஞானபிரகாஷ், அவரது மனைவி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஷேர்ஆட்டோ விபத்தில் தம்பதி, குழந்தையை இழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்