என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் போட்டி - அதிமுக அறிவிப்பு
Byமாலை மலர்26 Sep 2019 1:24 PM GMT (Updated: 26 Sep 2019 1:24 PM GMT)
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட் உள்ளது என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
சென்னை:
நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட காணை ஒன்றிய அதிமுக செயலாளரான முத்தமிழ்ச்செல்வன் விக்கிரவாண்டி தொகுதியிலும், நெல்லை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளரான ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் நாங்குநேரி தொகுதியிலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகின்றனர் என எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட் உள்ளது என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அ.தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இரு கட்சிகளும் கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X