search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இபிஎஸ்-ஓபிஎஸ்
    X
    இபிஎஸ்-ஓபிஎஸ்

    புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் போட்டி - அதிமுக அறிவிப்பு

    புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட் உள்ளது என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
    சென்னை:

    நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
     
    விழுப்புரம் வடக்கு மாவட்ட காணை ஒன்றிய அதிமுக செயலாளரான முத்தமிழ்ச்செல்வன் விக்கிரவாண்டி தொகுதியிலும், நெல்லை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளரான ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் நாங்குநேரி தொகுதியிலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகின்றனர் என எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட் உள்ளது என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து, அ.தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இரு கட்சிகளும் கையெழுத்திட்டுள்ளதாக  அறிவித்துள்ளது.
    Next Story
    ×