என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலத்தில் லாரி டிரைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்26 Sep 2019 11:27 AM GMT
திருமங்கலத்தில் லாரி டிரைவர் வீட்டின் கதவை உடைத்து நகை- பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
திருமங்கலம்:
திருமங்கலம் பசும்பொன் தெரு சுந்தரக்கொத்தன் சந்து பகுதியில் வசிப்பவர் அழகர்பாண்டி, லாரி டிரைவர். இவர் வேலைக்கு சென்று விட்ட நிலையில் மனைவி மகாலட்சுமி (வயது30) வீட்டை பூட்டி விட்டு தாய் வீட்டிற்கு சென்றார்.
இதனை அறிந்த யாரோ மர்ம நபர்கள் முன்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். இன்று காலை கதவு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மகாலட்சுமிக்கு தகவல் கொடுத்தனர்.
திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த 2 பீரோக்கள் திறந்து கிடந்தன. அதில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.800 திருட்டு போய் இருப்பதாக மகாலட்சுமி தெரிவித்தார்.
கொள்ளையர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X