என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பள்ளி வளாகத்தில் ஆசிரியரை தாக்கிய 2 பேர் கைது
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்துள்ள எஸ்.உடுப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆசிரியராக சரவணன் (வயது 35) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். பள்ளி குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சரவணனை, பொதுமக்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சரமாரியாக தாக்கினர். மேலும் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்தனர்.
காயம் அடைந்த சரவணன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இவர், தன்னை தாக்கியவர்கள் மீது புகார் கொடுத்தார். அதன்பேரின் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் எஸ்.உடுப்பம் பகுதியை சேர்ந்த நாமக்கலில் தனியார் டிரான்போர்ட் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் செல்வராஜ் (வயது 45) மற்றும் விவசாயி காளியண்ணன் (60) ஆகியோரை புதுச்சத்திரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் கொடுத்த புகாரில் ஆசிரியர் சரவணன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார். அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்