என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஓட்டேரியில் வியாபாரி வீட்டில் 40 பவுன் நகை- பணம் கொள்ளை
பெரம்பூர்:
ஓட்டேரி ஜமாலியா அருகில் உள்ள சாந்தி காலனியை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவர் இரும்பு, மர வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த 19-ந்தேதி சாகுல் அமீது குடும்பத்துடன் தனது சொந்த ஊரான நெல்லை சென்றார். நேற்று இரவு 8 மணி அளவில் சென்னை திரும்பினார்.
சாந்தி நகரில் உள்ள வீட்டுக்கு சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை யாரோ கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து சாகுல்அமீது போலீசில் புகார் செய்தார்.
ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைரேகை நிபுணர்கள், வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். நகை, பணத்துடன் தப்பி ஓடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்