search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறை கைதி
    X
    சிறை கைதி

    கோவை மத்திய சிறையில் 7 செல்போன்கள் பறிமுதல்

    கோவை மத்திய சிறையில் 7 செல்போன்களை பறிமுதல் செய்த சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் உள்பட என மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    ஜெயில் வளாகத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வளைய பிரிவு பகுதியில் அடைக்கப்பட்ட கைதிகள் செல்போன்களை மறைத்து வைத்து பயன்படுத்துவதாக புகார்கள் வந்தது.

    இதனையடுத்து நேற்று இரவு சிறை அதிகாரிகள் உயர்பாதுகாப்பு வளைய பிரிவுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அங்கு இருந்து கைதிகள் மறைத்து வைத்து பயன்படுத்திய 7 செல்போன்களை சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். செல்போன்களை கைப்பற்றிய அதிகாரிகள் இதனை பயன்படுத்தியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×