search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலாளி உயிரிழப்பு
    X
    தொழிலாளி உயிரிழப்பு

    காரிமங்கலம் அருகே விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு

    காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள அடிலம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது55). இவர் கடந்த 17-ந்தேதி அன்று அடிமலத்தில் இருந்து பொன்னேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் கோவிந்தசாமி மீது நேருக்கு நேர் மோதி கொண்டது. இதில் படுகாயம் அடைந்த கோவிந்தசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×