என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரல்வாய்மொழி அருகே தூக்குபோட்டு பெண் தற்கொலை
Byமாலை மலர்25 Sep 2019 1:34 PM GMT (Updated: 25 Sep 2019 1:34 PM GMT)
ஆரல்வாய்மொழி அருகே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழியை அடுத்த தேரேகால்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ராஜனின் மனைவி ஷைலா (வயது 47). நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ராஜன்-ஷைலா தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணமாகி கோவையில் வசித்து வருகிறார். தற்போது பிரசவத்திற்காக ஊருக்கு வந்துள்ளார்.
ஷைலாவுக்கு கடன் பிரச்சினை இருந்து வந்தது. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார். கடந்த சில நாட்களாக யாருடனும் பேசாமல் இருந்தார். இன்று காலை இவரது அறைக்கதவு நீண்ட நேரமாக திறக்கப்பட வில்லை. இதனால் உறவினர்கள் அறை கதவை உடைத்து பார்த்தனர்.
அங்கு ஷைலா தூக்கில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சப்-இன்ஸ் பெக்டர் மகேஷ்வர்ராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரராஜன் ஆகியோர் விரைந்து சென்று பிணத்தை மீட்டனர்.
பின்னர் ஷைலாவின் உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் இச்சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X