என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலி ஆவணங்களை காட்டி ஆசிரியரிடம் ரூ.25 லட்சம் மோசடி - ஆசிரியை மீது போலீசில் புகார்
Byமாலை மலர்25 Sep 2019 12:11 PM GMT (Updated: 25 Sep 2019 12:11 PM GMT)
மதுரையில் போலி ஆவணங்களை காட்டி ஆசிரியரிடம் ரூ.24½ லட்சம் மோசடி செய்ததாக பெண் ஆசிரியை மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை கூடல்புதூர் 4-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் ஜெபமாலைராஜ் (வயது52). தெற்குவாசல் தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.
இவரது மனைவி சைலா குமாரியும் ஆசிரியையாக உள்ளார். அவருடன் வேலை பார்க்கும் ஆசிரியை கரோலின் சோபனா, போலி ஆவணங்கள் மூலம் பணம் மோசடி செய்துவிட்டதாக ஆசிரியர் ஜெபமாலைராஜ் புகார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மதுரை மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். கோர்ட்டு உத்தரவின்பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விளாங்குடியில் வீடு கட்டுவதாகவும், அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் ஆசிரியை கரோலின் சோபனா பண உதவி கேட்டார். சில ஆவணங்களையும் அளித்தார். அதனை பெற்றுக்கொண்டு ரூ.13 லட்சம் கொடுத்தேன்.
3 மாதம் கழித்து தஞ்சாவூரில் அரசு பள்ளியில் பணியாற்றும் தனது சகோதரி ஆரோக்கிய ஸ்டெல்லாவுக்கு பணம் தேவைப்படுவதாக கரோலின் சோபனா தெரிவித்தார். அப்போது ரூ.11½ லட்சம் கொடுத்தேன்.
அதன் பின்னர் கரோலின் சோபனா கொடுத்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது அது போலியானது என தெரிய வந்தது. எனவே அவரிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டேன். ஆனால் தரமறுத்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை கூடல்புதூர் 4-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் ஜெபமாலைராஜ் (வயது52). தெற்குவாசல் தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.
இவரது மனைவி சைலா குமாரியும் ஆசிரியையாக உள்ளார். அவருடன் வேலை பார்க்கும் ஆசிரியை கரோலின் சோபனா, போலி ஆவணங்கள் மூலம் பணம் மோசடி செய்துவிட்டதாக ஆசிரியர் ஜெபமாலைராஜ் புகார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மதுரை மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். கோர்ட்டு உத்தரவின்பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விளாங்குடியில் வீடு கட்டுவதாகவும், அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் ஆசிரியை கரோலின் சோபனா பண உதவி கேட்டார். சில ஆவணங்களையும் அளித்தார். அதனை பெற்றுக்கொண்டு ரூ.13 லட்சம் கொடுத்தேன்.
3 மாதம் கழித்து தஞ்சாவூரில் அரசு பள்ளியில் பணியாற்றும் தனது சகோதரி ஆரோக்கிய ஸ்டெல்லாவுக்கு பணம் தேவைப்படுவதாக கரோலின் சோபனா தெரிவித்தார். அப்போது ரூ.11½ லட்சம் கொடுத்தேன்.
அதன் பின்னர் கரோலின் சோபனா கொடுத்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது அது போலியானது என தெரிய வந்தது. எனவே அவரிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டேன். ஆனால் தரமறுத்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X