search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    கோவையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்

    கோவையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயமானார்கள். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் மாணவிகளை தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை தாளியூர் அருகே உள்ள உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகள் ரேஷ்மா (வயது 17). வால்பாறை தாய்குடியை சேர்ந்த பாபு என்பவரது மகள் ஜோஸ்மின் (17). இவர்கள் 2 பேரும் பாரதியார் ரோட்டில் உள்ள பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகின்றனர்.

    இவர்கள் 2 பேரும் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தனர். சம்பவத்தன்று இவர்கள் வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் கல்லூரி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் இவர்கள் 2 பேர் மட்டும் விடுதிக்கு திரும்பி வரவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த பலனும் இல்லை.

    இது குறித்து விடுதி வார்டன் சுகந்திராணி மாயமான ரேஷ்மா, ஜோஸ்மின் ஆகியோரை கண்டுபிடித்து தரும்படி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவிகளை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×