search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வெள்ளகோவில் அருகே விவசாயி தற்கொலை

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே விஷத்தன்மை கொண்ட காயை தின்று விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தண்டகுமாரவலசு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 56). விவசாயி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கிருஷ்ணகுமார்(24) என்ற மகன் உள்ளார். சம்பவத்தன்று சுப்பிரமணி வி‌ஷத்தன்மை உள்ள கண்வலிகாயை தின்றார்.

    இதையடுத்து தனது மனைவியிடம் தான் வி‌ஷக்காயை தின்றுவிட்டதாக கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வி தனது மகனுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து கிருஷ்ணகுமார் வீட்டிற்கு விரைந்து வந்து சுப்பிரமணியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×