என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு- சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல்
Byமாலை மலர்24 Sep 2019 11:56 AM GMT (Updated: 24 Sep 2019 11:56 AM GMT)
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் புதிய பஸ் நிலையம் அருகே இன்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் புதிய பஸ் நிலையம் அருகே இன்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெற வேண்டும். தமிழகம் மற்றும் புதுவையில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை அமல் படுத்தக்கூடாது. புதுவை மாநிலத்துக்கு தனி கல்வி வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
100-க்கும்மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் சுமார் அரை மணி நேரம் புதுவை- கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பொதுத்தேர்வை ரத்து செய்யவில்லை என்றால் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம் என மாணவர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X