search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மீண்டும் 120 அடியை எட்டியது மேட்டூர் அணை

    கனமழையால் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளளவான 120 அடியை இன்று எட்டியது.
    மேட்டூர்:

    கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரால் மேட்டூர் அணைக்கு கடந்த மாதம் அதிகபட்சமாக 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் மேட்டூர் அணை கடந்த 7-ந் தேதி நிரம்பியது. பின்னர் மழை குறைந்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.

    தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 9 ஆயிரத்து 97 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 119.95 அடி என்ற நிலையில் முழு கொள்ளளவை நெருங்கியது.

    இந்நிலையில் மேட்டூர் அணைக்கு இன்று தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தது. நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக உயர்ந்த நிலையில், இன்று காலையில் மேட்டூர் அணை 120 அடியை எட்டியது.

    இதையடுத்து அணையில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 15 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. 
    Next Story
    ×