search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடத்தல்
    X
    கடத்தல்

    செல்லூரில் காதல் திருமணம் செய்த வாலிபரின் தாயை காரில் கடத்தி தாக்குதல்

    காதல் திருமணம் செய்த வாலிபரின் தாயாரை காரில் கடத்தி தாக்கியதாக 3 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை செல்லூர் பூந்தமல்லி நகர் லெனின் தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் பிரவீன். தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த ஹேமா என்பவரை காதலித்துள்ளார்.

    இந்த காதலுக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனை மீறி காதல் ஜோடியின் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் பிரவீணின் தாயார் சந்திரா (வயது 48) வீட்டு முன்பு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஹேமாவின் சகோதரர் தலைமையில் 3 பேர் கும்பல் வந்தது.

    அந்த கும்பல் சந்திராவை காரில் கடத்திச் சென்று சரமாரியாக தாக்கியது. பின்னர் ஒரு இடத்தில் இறக்கி விட்டுச் சென்றதாக செல்லூர் போலீசில் சந்திரா புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×