என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செல்லூரில் காதல் திருமணம் செய்த வாலிபரின் தாயை காரில் கடத்தி தாக்குதல்
Byமாலை மலர்23 Sep 2019 4:37 PM GMT (Updated: 23 Sep 2019 4:37 PM GMT)
காதல் திருமணம் செய்த வாலிபரின் தாயாரை காரில் கடத்தி தாக்கியதாக 3 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை செல்லூர் பூந்தமல்லி நகர் லெனின் தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் பிரவீன். தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த ஹேமா என்பவரை காதலித்துள்ளார்.
இந்த காதலுக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனை மீறி காதல் ஜோடியின் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் பிரவீணின் தாயார் சந்திரா (வயது 48) வீட்டு முன்பு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஹேமாவின் சகோதரர் தலைமையில் 3 பேர் கும்பல் வந்தது.
அந்த கும்பல் சந்திராவை காரில் கடத்திச் சென்று சரமாரியாக தாக்கியது. பின்னர் ஒரு இடத்தில் இறக்கி விட்டுச் சென்றதாக செல்லூர் போலீசில் சந்திரா புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X