search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை- பேக்கரி மாஸ்டர் போக்சோவில் கைது

    கிருஷ்ணகிரியில் சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பேக்கரி மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம். வேப்பனபள்ளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர், பள்ளிக்கு செல்வில்லை, இந்நிலையில், நேற்றைய முன்தினம் அந்த சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த பேக்கரி மாஸ்டரான, வி.மாதேப்பள்ளி மேலுரி பகுதியைச் சேர்ந்த பாலப்பன் மகன் சாரதி(25) என்பவர் அந்த சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

    தனது மகளை கடத்தி சென்ற தகவலறிந்த அந்த சிறுமியின் தந்தை கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட பேலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையிலான போலீசார், சாரதி மீது வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×