என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாங்குநேரி அருகே கல்லூரி மாணவி மாயம்
Byமாலை மலர்23 Sep 2019 1:42 PM GMT (Updated: 23 Sep 2019 1:42 PM GMT)
நாங்குநேரி அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாதது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள சூரங்குடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அனந்த பத்மநாபன் (வயது 43). இவர் அங்குள்ள சாஸ்தா கோவில் பூசாரி ஆவார். இவரது மகள் ராஜேஸ்வரி (18) பொன்னாக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் தினசரி சூரங்குடிக்கு அருகே உள்ள வீராங்குளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 19-ந்தேதி காலையில் கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்ற ராஜேஸ்வரி மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய பெற்றோர்கள் கல்லூரியில் விசாரித்த போது அவர் அன்று கல்லூரிக்கே செல்லவில்லை என்பது தெரிந்தது. அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவரது தந்தை அனந்த பத்மநாபன் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X