என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கள்ளக்காதலுக்கு உதவிய வாலிபர் கொலை: 2 பெண்கள் உள்பட 9 பேர் கைது
மதுரை:
மதுரை ஆத்திக்குளம் வண்டிப்பாதை தெருவைச் சேர்ந்த துரைப்பாண்டி மகன் குருநாதசேதுபதி (வயது 25), நேற்று முன்தினம் ஆயுதப்படை மைதானம் அருகே மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் சிம்மக்கல் அனுமன் கோவில் படித்துறையில் அரிவாளால் வெட்டுப்பட்ட மகேஸ்வரிக்கு ஆதரவாக செயல்பட்டதால் குருநாதசேதுபதி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
முடக்கத்தான் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற ஜட்டி ஜெயக்குமாரின் கட்டுப்பாட்டில் இருந்த மகேஸ்வரி, அவரை பிரிந்து உறவினர் கவுதமை திருமணம் செய்துள்ளார்.
இந்த திருமணத்திற்கு உதவியதால், கவுதமின் நண்பர் குருநாத சேதுபதி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜெயக்குமார் அவருடன் வசித்த மகேஸ்வரியின் சகோதரி பஞ்சவர்ணம் உள்பட சிலரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சிலைமான் அருகே உள்ள பூஞ்சுத்தி கிராமத்தில் ஒரு தோட்டத்தில் கொலை கும்பல் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று கொலை கும்பலை மடக்கிப்பிடித்தனர். தொடர்ந்து ஜெயக்குமார் என்ற ஜட்டி ஜெயக்குமார், பக்சவர்ணம், அம்பிகாவதி, விஜி என்ற விஜயபாண்டி, ரமேஷ், விக்னேஷ், கோடி கிருஷ்ணா, முனீஸ்வரன், ராஜ்மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்