என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குமரி மாவட்டத்தில் அதிரடி சோதனை - புகையிலை பொருட்கள் விற்ற 21 பேர் கைது
Byமாலை மலர்23 Sep 2019 12:30 PM GMT (Updated: 23 Sep 2019 12:30 PM GMT)
குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 21 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் புகையிலை பொருட்களை விற்பவர்களை கண்காணித்து கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் பள்ளிகள், கல்லூரிகள், பஸ் நிலையம் மற்றும் ஆஸ்பத்திரிகள் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. மாவட்டம் முழுவதும் நடந்த இந்த சோதனையில் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் போலீசார் மேற் கொண்ட சோதனையில் அந்த பகுதியில் புகையிலை விற்பனை செய்ததாக கனக ஜெலின்(வயது46) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
அதே போல் கொல்லங்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் மேற்கொண்ட சோதனையில் கண்ணன் நாகம் பகுதியில் ஒரு கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் புகையிலை விற்பனை செய்ததாக பால கிருஷ்ணன்(60) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 20 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதே போல் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அவர்கள் தலகுளம், பன்னிக்கோடு பகுதிகளிலும் நடத்திய சோதனையில் அங்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக நாகராஜன்(51), சண்முகவடிவு(62) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 37 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதே போல் தக்கலை, வடசேரி மார்த்தாண்டம், குலசேகரம், திருவட்டார் பகுதிகளில் நடத்திய சோதனையில் 21 பேர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதைடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 350 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் நேற்று மேற்கொண்ட சோதனையில் மாவட்டம் முழுவதும் தலைமறைவு குற்றவாளிகள் 17 பேரை கைது செய்தனர்.
இவர்கள் மீது அடி, தடி வழக்கு, கொலை முயற்சி வழக்கு, திருட்டு வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் இருந்து வந்தது.
போலீசார் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருப்பவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் புகையிலை பொருட்களை விற்பவர்களை கண்காணித்து கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் பள்ளிகள், கல்லூரிகள், பஸ் நிலையம் மற்றும் ஆஸ்பத்திரிகள் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. மாவட்டம் முழுவதும் நடந்த இந்த சோதனையில் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் போலீசார் மேற் கொண்ட சோதனையில் அந்த பகுதியில் புகையிலை விற்பனை செய்ததாக கனக ஜெலின்(வயது46) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
அதே போல் கொல்லங்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் மேற்கொண்ட சோதனையில் கண்ணன் நாகம் பகுதியில் ஒரு கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் புகையிலை விற்பனை செய்ததாக பால கிருஷ்ணன்(60) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 20 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதே போல் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அவர்கள் தலகுளம், பன்னிக்கோடு பகுதிகளிலும் நடத்திய சோதனையில் அங்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக நாகராஜன்(51), சண்முகவடிவு(62) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 37 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதே போல் தக்கலை, வடசேரி மார்த்தாண்டம், குலசேகரம், திருவட்டார் பகுதிகளில் நடத்திய சோதனையில் 21 பேர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதைடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 350 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் நேற்று மேற்கொண்ட சோதனையில் மாவட்டம் முழுவதும் தலைமறைவு குற்றவாளிகள் 17 பேரை கைது செய்தனர்.
இவர்கள் மீது அடி, தடி வழக்கு, கொலை முயற்சி வழக்கு, திருட்டு வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் இருந்து வந்தது.
போலீசார் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருப்பவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X