என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கள்ளிக்குடியில் ராணுவ வீரர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
திருமங்கலம்:
திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி சூர்யா நகரைச் சேர்ந்தவர் ராஜகுரு (வயது 33). ராணுவ வீரரான இவர் ஹைதராபாத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சண்முக பிரியா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த 17-ந் தேதி கணவரை பார்ப்பதற்காக சண்முகபிரியா தனது குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு ஹைதரா பாத்துக்கு சென்று விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 5 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.
மறுநாள் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே சண்முகபிரியாவின் தந்தைக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்தபோது நகை, பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கள்ளிக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து நகை- பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்