search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    திண்டுக்கல் அருகே செல்போன் கடையை உடைத்து கொள்ளை

    திண்டுக்கல் அருகே நத்தத்தில் செல்போன் கடையை உடைத்து பணம் கொள்ளைபோனது.

    நத்தம்:

    நத்தம் அருகே வத்திபட்டியில் பூமிராஜ்(32) என்பவர் செல்போன் கடை வைத்துள்ளார். இவர் வழக்கம் போல் கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். காலையில் வந்து திறந்த போது கடையின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த செல்போன்கள் மற்றும் ரொக்கம் ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருந்தது.

    மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து நத்தம் காவல்நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு தடயங்களை பதிவு செய்தனர்.

    நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×