search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிளஸ்-2 மாணவர் கைது

    ஊத்தங்கரை அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவியை அடுத்துள்ள மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அந்த பகுதி அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அப்போது அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த நந்தீஸ்குமார் என்பவர் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினார்.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் கல்லாவி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நந்தீஸ்குமார் என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×